செய்திகள்இலங்கைபிராந்தியம்

வேலணை பிரதேச சபை பாதீடு திகதி மாற்றம்! – உறுப்பினர்கள் எதிர்ப்பு

VideoCapture 20211130 160209
Share

யாழ்ப்பாணம் – வேலணை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு திகதி மாற்றப்பட்டமையினால் உறுப்பினர்கள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

வேலணை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு கூட்டம் இன்று மதியம் ஒரு மணிக்கு நடைபெறுமென உறுப்பினர்களுக்கு கடந்த 26 ஆம் திகதி கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இன்று நடைபெற இருந்த விசேட கூட்டமானது தவிர்க்க முடியாத காரணத்தினால் தவிசாளரினால் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த கூட்டம் எதிர்வரும் மாதம் மூன்றாம் திகதி மதியம் ஒரு மணிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தந்தி ( Telegraph ) மூலம் உறுப்பினர்களுக்கு இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அனுப்பப்பட்ட தந்தி ( Telegraph ) தமது கரங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என உறுப்பினர்கள் சிலர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குற்பட்ட வேலணை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோற்கடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அதன் காரனமாகத்தான் கூட்டத்தினை நடாத்தாது இழுத்தடிப்பதாகவும் உறுப்பினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இன்றையதினம் சபை அமர்விற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்ணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என மொத்தமாக 10 உறுப்பினர்கள் வருகைதந்திருந்த அதேவேளை,

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 6 உறுப்பினர்களும்,
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 2 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என மொத்தமாக 10 உறுப்பினர்கள் வருகைதரவில்லை.

20 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக 8 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக 6 உறுப்பினர்களும், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் 2 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்ணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பாக தலா ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

VideoCapture 20211130 160231 VideoCapture 20211130 160256

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...