நகர அபிவிருத்தி அமைச்சால் நாடு முழுவதும் 100 நகரங்களை அழகுபடுத்தும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட வேலணை வங்களாவடி நகரம் இன்றையதினம் மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையால் நாடு முழுவதும் 100 நகரங்களை அழகுபடுத்தும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வேலணை வங்களாவடி நகரமும் நவீனமயப்படுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வந்தது.
அபிவிருத்தி செய்யப்பட்ட தீவகத்தின் மையமான வேலணை பிரதேசத்தின் வங்களாவடி நகரத்தை மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் சபையின் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இன்று பிற்பகல் 1 மணியளவில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் அபிவிருத்தி செய்யப்பட்ட வங்கயாவடி நகரம் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தியால் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
#SriLankaNews
Leave a comment