விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வாகனப் பேரணி!!!

அரசின் விலையேற்றத்தைக் கண்டித்து மக்கள் விடுதலை முண்ணனியினால் வாகன பேரணி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை- கந்தளாய் பிரதேசத்தில் இன்று (24) வாகன பேரணி முன்னெடுக்கப்பட்டது.

கந்தளாய் நகரிலிருந்து ஆரம்பித்த வாகனத் தொரடணி முள்ளிப்பொத்தானை, தம்பலாகாமம், நான்காம் கட்டை ஊடாக திருகோணமலையைச் சென்றடைந்தது.

trinco 01

நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் கறுப்புக்கொடிகளை ஏந்திய வண்ணம் இவ்வாகன பேரணி இடம்பெற்றுள்ளது.

அரசே விலையேற்றத்தை குறை, மக்களை கஷ்டப்படுத்தாதே, சுகபோகத்திற்கு மக்களை விற்காதே, போன்ற கோஷங்களுடன் இவ்வாகனப் பேரணி இடம்பெற்றுள்ளது.

#SrilankaNews

Exit mobile version