vehicle
செய்திகள்இலங்கை

வாகனங்களின் விலை குறையாது!

Share

அரசாங்கம் வாகனங்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்தாலும் தற்போது அதிகரித்து காணப்படும் விலை குறையாது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

அரசாங்கம் வாகன இறக்குமதியை தற்போது நிறுத்தியுள்ளமையால் கார் விற்பனையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது விலை ஏறும் என்ற கோட்பாடு ஏற்கனவே வாகனங்களை பாதித்துள்ளது. ரூபா மதிப்பு குறைவு மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு என்பன வாகனங்களின் விலை கடுமையாக அதிகரித்தமைக்கான காரணமாகும். ஆனால் இதிலிருந்து வெளிவர நீண்ட காலம் பிடிக்கும் எடுக்கும்.

அரசாங்கம் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாகனங்களின் இறக்குமதியை நிறுத்தியதிலிருந்து, கார் விற்பனையாளர்கள் வங்கிக் கடன்கள் மற்றும் பிற செலவுகளை வணிகங்களுக்கான மூலதன நிதியில் ஈடுசெய்கின்றனர். இதனால் இத்துறையில் தொழில் புரிந்த பலர் வேலைகளை இழந்துள்ளனர்.

எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் இல்லாத நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பயன்படுத்திய ஜப்பானிய வாகனங்கள் அனைத்தும் இப்போது இருப்பது போல் ஒவ்வொன்றாக உயர்ந்து இந்திய வாகனங்கள் சில இலட்சங்கள் உயர்ந்துள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...