24 663700d1d5c4d
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதியால் இலங்கைக்கு கிடைக்கப் போகும் 750 மில்லியன் டொலர்

Share

வாகன இறக்குமதியால் இலங்கைக்கு கிடைக்கப் போகும் 750 மில்லியன் டொலர்

இலங்கையில் வாகனங்கள் இறக்குமதி செய்தால் 750 மில்லியன் டொலர் வரி வருமானம் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டில் டொலர் நெருக்கடி காரணமாக, வாகனங்கள் உட்பட சுமார் 2000 வகையான பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டது.

ஆனால் நாட்டின் தற்போதைய தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கி வருகின்றது.

அதற்கமைய, வாகன இறக்குமதி தடை நீங்கினால் வருடத்திற்கு சுமார் 100 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் சுமார் 750 மில்லியன் டொலர்களை வரியாக ஈட்ட முடியும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டு வாகன இறக்குமதி தடை செய்யப்பட்ட போதும், ஆண்டுக்கு சுமார் 100 மில்லியன் டொலர் மதிப்புள்ள வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

வாகன இறக்குமதியாளர்களின் தகவலுக்கமைய, தற்போது மிகவும் மதிப்புமிக்க வாகனம் மின்சார வாகனம் ஆகும். அதில் ஒன்று குறைந்தது 2 கோடி ரூபாயாக காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...