உச்சத்தை தொட்ட மரக்கறிகளின் விலை! ஏற்பட்டுள்ள சிக்கல்
இலங்கைசெய்திகள்

உச்சத்தை தொட்ட மரக்கறிகளின் விலை! ஏற்பட்டுள்ள சிக்கல்

Share

உச்சத்தை தொட்ட மரக்கறிகளின் விலை! ஏற்பட்டுள்ள சிக்கல்

மட்டக்களப்பில் மரக்கறி விலைகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, ஒரு கிலோ பச்சமிளகாய் 1,300 ரூபாவும், ஒரு கிலோ இஞ்சி 3,000 ரூபாவும், ஒரு கிலோ கரட் 500 ரூபாவாகவும் உயர்ந்துள்ளதாக மட்டக்களப்பு பொதுச் சந்தை மரக்கறி விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் கூறியுள்ளதாவது, தற்போது பச்சை மிளகாய்க்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஒரு கிலோ பச்சை மிளகாயை 1,200 ரூபாவுக்கு கொள்வனவு செய்து 1,300 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றோம்.

அதேவேளை, சந்தையில் ஒருகிலோ இஞ்சி 3 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்வதுடன் சந்தையில் ஒரு கிலோ இஞ்சியைக் கொள்வனவு செய்ய முடியாது அந்தளவிற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கரட் ஒரு கிலோ 500 ரூபாவாகவும், உர்ழைக்கிழங்கு 240 ரூபாவாகவும் பெரிய வெங்காயம் 150 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.

இவ்வாறான தட்டுப்பாடு விலை உயர்வு காரணமாகப் பொதுமக்கள் தமது உணவான கறிகளில் பச்சைமிளகாய் இஞ்சி போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ள முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அதேவேளை, மலையகத்தில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், மலையக விவசாயிகளினால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின் காரணமாக குறித்த மரக்கறிகள் அழுகி போவதற்கான ஆபத்து உள்ளதாக மலையக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8f144b60 f970 11ef 9e61 71ee71f26eb1.jpg
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பதுளையில் இளம் வயதுக் கர்ப்பங்கள் அதிகரிப்பு; வெலிக்கந்தையில் அதிக சிறுவர் குற்றங்கள் – அமைச்சர் எச்சரிக்கை!

பதுளை மாவட்டத்தில் இளம் வயதுக் கர்ப்பங்கள் மற்றும் இணையவழி வன்முறைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக மகளிர் மற்றும்...

Screenshot 2025 12 02 at 16.09.23.webp
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டிட்வா சூறாவளித் தாக்கம்: 103 சிறுவர்கள் பெற்றோரை இழந்து தவிப்பு – விசேட பாதுகாப்புத் திட்டம் தயார்!

சமீபத்தில் நாட்டைத் தாக்கிய ‘டிட்வா’ சூறாவளியின் விளைவாக 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தமது தாய், தந்தை...

vikatan 2025 06 24 deer3cum america iran
உலகம்செய்திகள்

அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்: ஈரானிய வெளியுறவு அமைச்சர் கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் ஈரானைத் தாக்க முற்பட்டால், அங்குள்ள அமெரிக்க இராணுவத்...

bee721eca96246c6bdfe477cb1fb978e
செய்திகள்உலகம்

60 பில்லியன் டொலர் வருவாய்: நெட்ஃபிளிக்ஸை முந்தியது யூடியூப்!

உலகின் முன்னணி காணொளி தளமான யூடியூப், 2025 ஆம் நிதியாண்டில் 60 பில்லியன் டொலருக்கும் அதிகமான...