tamilni 173 scaled
இலங்கைசெய்திகள்

இரவில் அரை நிர்வாணமாக்கப்பட்ட தமிழர்கள்! வேலன் சுவாமிகள்

Share

இரவில் அரை நிர்வாணமாக்கப்பட்ட தமிழர்கள்! வேலன் சுவாமிகள்

வெடுக்குநாறி மலையில் நேற்றிரவு இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது திடீரென நுழைந்த பொலிஸார் எட்டு பேரை கைது செய்து அரை நிர்வாணமாக தூக்கிச்சென்றதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி மலையில் ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜை நிகழ்வுகளை தடுத்து நிறுத்திய பொலிஸாரின் செயற்பாடு தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு விளக்கமளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் இலங்கை பொலிஸார் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி தன்னிச்சையாக மனிதாபிமானமற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், வெடுக்குநாறிமலை ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது எட்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அரை நிர்வாணமாக தூக்கிச்செல்லப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது.

வெடுக்குநாறிமலையில் ஆலய நிர்வாகத்தினரால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூஜை நிகழ்வுகளில் எவ்வித தவறும் இல்லையென வவுனியா நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.

இருப்பினும் நீதிமன்ற கட்டளையின்றி நீதிமன்ற உத்தரவினையும் மீறி பொலிஸார் தன்னிச்சையாக பல உத்தரவுகளை வெளியிட்டு அடாவடியாக செயற்பட்டு வருகின்றனர்.

மேலும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே அவர்கள் தொடர்பில் பல ஆதாரங்களையும், கைது செய்யப்பட்டமைக்கான பதிவுகளையும் பொலிஸார் தேடி வருவதாகவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...