WhatsApp Image 2022 05 02 at 11.05.36 AM
இந்தியாஇலங்கைசெய்திகள்

வவுனியா வாசிகள் ஐந்து பேர் கைக் குழந்தையுடன் இந்தியாவில் தஞ்சம்!

Share

இலங்கையில் இருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கடல் வழியாக தமிழகம் சென்று அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

வவுனியா சிதம்பர புரம் பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று தமது ஒன்றரை மாத குழந்தை உள்ளிட்ட ஐந்து பேருடன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கையில் இருந்து படகொன்றில் புறப்பட்டு இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை இராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் கரை இறங்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அறிந்த இராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு பிரிவு பொலிஸார் அவர்களை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் போது, இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக தாம் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளதாகவும், தொழில்களை இழந்து, வாழ்வாதரம் இன்றி கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டமையாலேயே தாம் தமிழகம் வந்ததாக தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்களை மண்டபம் அகதி முகாமில் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 80 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...