WhatsApp Image 2022 05 02 at 11.05.36 AM
இந்தியாஇலங்கைசெய்திகள்

வவுனியா வாசிகள் ஐந்து பேர் கைக் குழந்தையுடன் இந்தியாவில் தஞ்சம்!

Share

இலங்கையில் இருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கடல் வழியாக தமிழகம் சென்று அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

வவுனியா சிதம்பர புரம் பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று தமது ஒன்றரை மாத குழந்தை உள்ளிட்ட ஐந்து பேருடன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கையில் இருந்து படகொன்றில் புறப்பட்டு இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை இராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் கரை இறங்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அறிந்த இராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு பிரிவு பொலிஸார் அவர்களை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் போது, இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக தாம் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளதாகவும், தொழில்களை இழந்து, வாழ்வாதரம் இன்றி கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டமையாலேயே தாம் தமிழகம் வந்ததாக தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்களை மண்டபம் அகதி முகாமில் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 80 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...