tamilni 23 scaled
இலங்கைசெய்திகள்

வற் வரி அதிகரிப்பால் பொது மக்களுக்கு நெருக்கடி

Share

வற் வரி அதிகரிப்பால் பொது மக்களுக்கு நெருக்கடி

அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வற் வரி விகிதங்களை 18 சதவீதமாக உயர்த்துவது பணவீக்கத்தை அதிகரிக்கலாம் என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகளை விதிப்பதன் மூலம் விலை மட்டங்களை அதிகரிப்பதன் மூலம் பணவீக்கத்தை அதிகரிக்க முடியும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரி அதிகரிப்பினால் நிச்சயமாக பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என அவர் அவர் சுட்டிக்காட்டியு்ள்ளார்.

அதிகரிக்கப்படும் வரி வாடிக்கையாளர்களிடமே அறவிடப்படும். இதனால் விநியோகஸ்தர்கள் அதிகளவில் விலைகளை அதிகரித்து தங்கள் பொருட்களை வழங்குவார்கள்.

இதனை அதிக விலைக்கு வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டும்.

உதாரணமாக 100 ரூபாய்க்கு ஒரு பொருளை கொள்வனவு செய்திருந்தால் ஜனவரி மாதம் முதல் 103 ரூபாய்க்கும் அதிக கட்டணத்தை மக்கள் செலுத்த நேரிடும்.

பெறுமதி சேர்ப்புக்கான வரி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் இந்நாட்டின் வறிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

மேலும் விலை அதிகரிப்பு காரணமாக உலக சந்தையில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் போட்டித்தன்மையும் பாதிக்கப்படும் என சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...