vaasu
அரசியல்இலங்கைசெய்திகள்

இடைக்கால அரசு: பின்னடிக்கும் கோட்டா! – இன்றைய சந்திப்பில் பேசவில்லை என்கிறார் வாசுதேவ

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இன்று நடைபெற்ற சந்திப்பில் முக்கியமான விடயங்கள் எதுவும் பேசப்படவில்லை என்று முன்னாள் அமைச்சரான வாசுதேவ நாணயக்கார எம்.பி. தெரிவித்தார்.

இடைக்கால அரசு தொடர்பில் உறுதியான கலந்துரையாடல் இடம்பெறாமல் சந்திப்பு முடிவடைந்தது என்றும் அவர் கூறினார்.

கடந்த வாரம் அரசில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படுவதற்குத் தீர்மானித்த 41 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி இன்றிரவு சந்தித்தார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை, புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசை அமைக்குமாறு ஜனாதிபதியை நிர்ப்பந்திப்பதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பகல் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...