சுயேட்சை வசமாகியது வல்வெட்டித்துறை நகரசபை
வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளராக சுயேட்சைக் குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு நேற்று நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது தவிசாளர் தெரிவுக்கு போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில்
டெலோ உறுப்பினர் சதீஸ் மற்றும் சுயேட்சைக் குழு சார்பில் செல்வேந்திரா ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில், போட்டியிட்ட டெலோ உறுப்பினர் சதீஸ் 8 வாக்குகளையும், சுயேட்சைக் குழுவின் சார்பில் போட்டியிட்ட செல்வேந்திரா 9 வாக்குகளையும் பெற்றனர்.
இந்த வாக்குகளின் அடிப்படையில் மேலதிக மேலதிக ஒரு வாக்கால் சுயேட்சைக் குழுவின் சார்பில் போட்டியிட்ட செல்வேந்திரா வெற்றி பெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் அண்மையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தார். இந்த நிலையில் தவிசாளர் தெரிவுக்கு ஏற்பட்ட வெற்றிடத்துக்கு புதிய தவிசாளர் தேர்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.