டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!
இலங்கைசெய்திகள்

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

Share

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

அமெரிக்க டொலரின் ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்டின் (SPOT Exchange Rate) அதிகபட்ச பெறுமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினம்(18.07.2023) அமெரிக்க டொலரின் ‘ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்’ 322.80 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 04, ஆம் திகதிக்கு பின்னர் பதிவான, அமெரிக்க டொலரின் ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்டின் (SPOT Exchange Rate) அதிகபட்ச பெறுமதி இதுவாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையிலும் நேற்று (18.07.2023) மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை மத்திய வங்கி நேற்று வௌியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி , அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 314.95 ரூபாவாகவும் விற்பனை விலை 328.65 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் (17.07.2023) டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் முறையே 313.29 மற்றும் 327.16 ரூபாவாக பதிவாகியிருந்தன.

இதற்கமைய நேற்று (18) அமெரிக்க டொலரின் ‘ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்’ 322.80 ரூபாய் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் 319.12 ரூபாவாக ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...