download 2 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா செப்டம்பர் 24ம் திகதி

Share

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா செப்டம்பர் 24ம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

ஒக்டோபர் 1ம் திகதி குருக்கட்டு விநாயகர் தரிசனமும் ஒக்டோபர் 2ம் திகதி வெண்ணைத் திருவிழாவும் ஒக்டோபர் 3ம் திகதி துகில் திருவிழாவும் ஒக்டோபர் 4ம் திகதி பாம்புத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

கம்சன் போர்த்திருவிழா ஒக்டோபர் 5ம் திகதியும் வேட்டைத்திருவிழா ஒக்டோபர் 6ம் திகதியும் சப்பறத் திருவிழா ஒக்டோபர் 7ம் திகதியும் தேர்த் திருவிழா ஒக்டோபர் 8ம் திகதியும், சமுத்திரத் தீர்த்தத் திருவிழா ஒக்டோபர் 8ம் திகதியும் இடம்பெறவுள்ளது.

கேணித் தீர்த்தத் திருவிழா ஒக்டோபர் 8ம் திகதி காலையும் அன்றைய தினம் மாலை கொடியிறக்க உற்சவமும் இடம்பெற்று பெருந்திருவிழா நிறைவுபெறும்.

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்தை சுகாதார முறைப்படி நடத்த மகோற்சவ கால முன்னாயத்த ஏற்பாட்டுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

செப்டம்பர் 2ம் திகதி வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறீ தலைமையில் இடம்பெற்ற மகோற்சவ கால முன்னாயத்த ஏற்பாட்டுக் கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது. இதன்போதே ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவத்தை சுகாதார முறைப்படி நடத்த தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதல் அவசியமானதாக கருதப்படுகின்றது, பக்தர்கள் ஆசார சீலர்களாக ஆலயத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது. ஆலய சுற்றாடலில் உணவு கையாளும் நிலையங்கள் அமைப்பவர்கள் நாட்டின் எப்பாகத்திலாவது பதிவு செய்யப்பட்ட உணவுச்சாலைகள் நடாத்துபவர்களாக இருத்தல் வேண்டும், சகல உணவு கையாள்பவர்களும் தாங்கள் பணிபுரியும் பதிவு செய்யப்பட்ட உணவுச்சாலை அமைந்துள்ள பிரதேசத்திற்கான சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலிருந்து பெறப்பட்ட மருத்துவச்சான்றிதழ் பெற்றிருப்பதுடன் அதனை தங்களுடன் வைத்திருத்தல் வேண்டும். (ஐஸ்கிறீம் கடைகள் உள்ளடங்கலாக),

பொதுச் சுகாதார பரிசோதகரின் கண்காணிப்புக்கு உட்பட்ட கிணறுகளிலிருந்து பெறப்படும் குடிநீரையே உபயோகத்தில் வேண்டும், ஆலயச்சுற்றாடலில் இனிப்புக்கடைகள், கச்சான் விற்பவர்கள் உற்பத்தியை இவ்விடங்களில் மேற்கொள்ள முடியாது. விற்பனையை மட்டும் செய்யமுடியும்.(கச்சான் வறுத்தல் இனிப்பு பண்டங்கள் தயாரித்தல்), அன்னதான மடங்களில் கடமையாற்றுபவர்கள் மருத்துவச் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

சகல கடை உரிமையாளர்களும் ஒவ்வொரு நாளும் வரும் கழிவுகளை வெளியில் வீசாது ஒன்றாகச் சேர்த்து பிரதேச சபை வாகனத்தின் மூலம் அகற்றுதல் வேண்டும், பச்சை குத்துதல், காதுகுத்துதல் போன்ற செயற்பாடுகள் ஆலயச் சுற்றாடலில் அனுமதிக்கப்படமாட்டடாது. போதைவஸ்து பொருட்கள், புகைத்தல் மதுபாவனைப் பாவனை, விற்பனை முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது – என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 8
இலங்கைசெய்திகள்

செம்மணியில் இன்று கண்டெடுக்கப்பட்ட முக்கிய அடையாளம்! தோண்ட தோண்ட காத்திருக்கும் அதிர்ச்சி

இதுவரை காலமும் செம்மணி மனித புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய...

10 8
இலங்கைசெய்திகள்

ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம்!

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமை...

8 8
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்து ஆலயத்தின் செயற்பாடு

தமிழர் பகுதியான மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த...

9 7
இலங்கைசெய்திகள்

விசாரணை வளையத்துக்குள் சிக்கப் போகும் அரசாங்க அதிகாரிகள்! சிலர் தப்பியோட்டம்

பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் முறைகேடுகளில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும், சுமார் 18 உயர் அரச...