COVID 19 VACCINE 6757
இலங்கைசெய்திகள்

நாட்டில் 12–18 வயதுக்கு இடைப்பட்டோருக்கு தடுப்பூசி!

Share

தற்போது நாட்டில் 20 – 29 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் 12 – 18 வயதுக்கு இடைப்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பாடசாலைகள் திறக்கப்படவில்லை.

இதனால் பாடசாலைகளை விரைவில் ஆரம்பிக்க 12–18 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு விரைவில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சூம் ஊடாக மேற்கொண்ட கலந்துரையாடலேயே சுகாதார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவை தெரிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை நிர்வாகத்தினருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன. அதேபோல் மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நிறைவடைந்துவிட்டால் பாடசாலைகள் விரைவில் திறக்கப்படும்.

இதேவேளை 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் முதலாவது தடுப்பூசியை 34 சதவீதமானோரும் இரண்டாவது தடுப்பூசியை 12 சதவீதமா​னோரும்  இதுவரையிலும் பெற்றுக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...