COVID 19 VACCINE 6757
இலங்கைசெய்திகள்

நாட்டில் 12–18 வயதுக்கு இடைப்பட்டோருக்கு தடுப்பூசி!

Share

தற்போது நாட்டில் 20 – 29 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் 12 – 18 வயதுக்கு இடைப்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பாடசாலைகள் திறக்கப்படவில்லை.

இதனால் பாடசாலைகளை விரைவில் ஆரம்பிக்க 12–18 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு விரைவில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சூம் ஊடாக மேற்கொண்ட கலந்துரையாடலேயே சுகாதார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவை தெரிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை நிர்வாகத்தினருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன. அதேபோல் மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நிறைவடைந்துவிட்டால் பாடசாலைகள் விரைவில் திறக்கப்படும்.

இதேவேளை 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் முதலாவது தடுப்பூசியை 34 சதவீதமானோரும் இரண்டாவது தடுப்பூசியை 12 சதவீதமா​னோரும்  இதுவரையிலும் பெற்றுக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...