AP21153574989120 scaled
இலங்கைசெய்திகள்

சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றல் – எவ்வித அச்சமும் வேண்டாம்

Share

சிறுவர்களுக்கு வழங்கப்படுகின்ற பைஸர் தடுப்பூசியை எந்தவித அச்சமும் இன்றி வைத்திய ஆலோசனைகளின் அடிப்படையில் பெறலாம்.

இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை குழந்தை சிறப்பு வைத்திய நிபுணர் கே.அருள்மொழி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 12–19 வயது வரையான விசேட தேவையுடைய சிறுவர்கள் மற்றும் நாள்பட்ட நோய் உடையோர் ஆகியோருக்கு கொழும்பில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடானது கொழும்பு, குருநாகல் மற்றும் அனுராதபுரம் என விரிவுபடுத்தப்படுத்தப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன்படி யாழ்ப்பாணத்துக்கும் விரைவில் பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை துரிதகதியில் சுகாதாரத் தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆகவே பெற்றோர் தமது சிறுவர்களுக்கு தடுப்பூசிகளை பெறும்போது குழந்தை வைத்திய நிபுணர்களின் ஆலோசனை பெற்று உரிய காலத்தில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வழிசெய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...