tamilni 176 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்காவின் விசேட பிரதிநிதி

Share

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்காவின் விசேட பிரதிநிதி

இன சமத்துவம் மற்றும் நீதிக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதியான டீசிரி கோமியர் ஸ்மித் (Desirée Cormier Smith) (11.12.2023) இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

இன்றைய தினம் வருகைத்தரும் அவர் ஒருவார காலம் நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த காலப்பகுதியில், கொழும்பு, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சமத்துவத்தை முன்னேற்றுவதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பல்வேறு சமூகங்களுடன் வலுப்படுத்தும் நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவுள்ளார்.

மேலும், இந்த பயணத்தின்போது அமெரிக்க பிரதிநிதி மலையக தமிழர்கள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் முக்கியமான சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.

இலங்கையில் ஓரங்கட்டப்பட்ட இன சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் அசைக்க முடியாத ஆதரவை வலியுறுத்தும் வகையில் இந்த சந்திப்புக்கள் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் தலைமையில் நுவரெலியாவில் அமெரிக்கத் தூதரகத்தின் ஆங்கில அணுகல் உதவித்தொகைத் திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதோடு பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறனை வழங்குவதில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது.

மலையக தமிழ் சமூகத்தின் இளைஞர்களை மேம்படுத்தும் முயற்சியில், மேற்கொள்ளப்பட்ட மூன்று மாத பயிற்சி முகாமை வெற்றிகரமாக முடித்த 25 மாணவர்களுக்கு சிறப்புப் பிரதிநிதி கோர்மியர் ஸ்மித் விருதுகளை வழங்கவுள்ளதாகவும் கூறப்படகிறது.

Share
தொடர்புடையது
Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...

Gotabaya Rajapaksa 2
இலங்கை

சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலையானார் கோட்டாபய ராஜபக்ச.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ...