Vimal
அரசியல்இலங்கைசெய்திகள்

அமெரிக்க இராஜதந்திரிகள் வருகை! – பின்னணியில் பஸில் என்கிறார் விமல்

Share

” எம்.சி.சி. உடன்படிக்கையை செயற்படுத்திக்கொள்வதற்காகவே அமெரிக்க இராஜதந்திரிகள் இலங்கை வந்துள்ளனர். இதன் பின்னணியில் நிதி அமைச்சர் செயற்படுகின்றார்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று மாலை நடைபெற்ற அரசியல் சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நல்லாட்சியின்போது எம்சிசி உடன்படிக்கையை செயற்படுத்துவதற்கு அமெரிக்கா முயற்சித்தது. அதற்கு நாம் இடமளிக்கவில்லை. இந்நிலையில் புதிய கோணத்தில் அந்த உடன்படிக்கையை செயற்படுத்தும் நோக்கிலேயே அமெரிக்க இராஜதந்திரிகள் இங்குவருகின்றனர்.

இலங்கை பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்தால் திட்டத்தை இலகுவில் நிறைவேற்றிவிடலாம் என்பதால்தான், அதற்கான சூழ்நிலையை நிதி அமைச்சர் ஏற்படுத்திக்கொடுக்கின்றார் .

தேசப்பற்றாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சியை ‘அசிங்கமான’ அமெரிக்கர் சீரழிக்கின்றனர். ” – என்றார் விமல்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
hemasiri pujitha 1
செய்திகள்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான விசாரணை மார்ச் 23-க்கு ஒத்திவைப்பு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத்துறை தகவல்கள் கிடைத்தும், அதனைத் தடுக்கத் தவறியதன் மூலம்...

MediaFile 11 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எக்ஸ்பிரஸ் பேர்ள் விவகாரம்: உள்ளூர் முகவர் நிறுவன இயக்குநர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் தீப்பிடித்து பாரிய சுற்றாடல் அழிவை ஏற்படுத்திய ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ (X-Press...

24 66a66df53bbf3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயிரிழை அமைப்பில் 23 கோடி ரூபா நிதி மோசடி? – முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் பகிரங்கக் குற்றச்சாட்டு!

புலம்பெயர் உறவுகளால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக வழங்கப்பட்ட சுமார் 23 கோடி ரூபா நிதியில்...

Dithwa Death Count
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டித்வா புயல் கோரம்: பலி எண்ணிக்கை 649 ஆக உயர்வு! இன்னும் 173 பேரைக் காணவில்லை – அதிர்ச்சித் தகவல்கள்.

‘டித்வா’ (Ditwa) புயலினால் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாகத் தொடர்ந்தும் 173 பேர் காணாமல்...