சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் புதிதாக இணைக்கப்பட்ட மாணவர்கள் சிலரை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் நால்வர் இரகசிய பொலிஸ் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தயாசாந்த விடுதிக்குள் அத்துமீறி உள்நுழைந்து பபுதிய மாணவர்களை அடித்து காயப்படுத்திய குற்றச்சாட்டில் இந்த மாணவர்களைக் கைது செய்ததாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் மொறட்டுவை, வெலிமடை, அம்பலாங்கொடை பிரதேசங்களைச் சேர்ந்த 25, 23 மற்றும் 24 வயதானவர்களாவர்.
#SriLankaNews