vijaya
அரசியல்இலங்கைசெய்திகள்

ஒளிவு மறைவு இன்றி ஒன்றிணையுங்கள்! – புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு

Share

” பிரச்சினைகளுக்கு பேச்சு மூலம் தீர்வு காண தேசிய ரீதியில் இணையுமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு எம்மால் முன்னெடுக்கப்படும் நகர்வு வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். இதில் ஒளிவு மறைவு இருக்கக்கூடாது. ”

இவ்வாறு நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

இன, மத, மற்றும் மொழி ரீதியாக காணப்படும் பிளவை – மோதல் தடுப்பதன் மூலம் கிராமிய மட்டத்தில் சமாதானத்தை உருவாக்க அரசியலமைப்பு சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

” இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக காணப்படும் பிரச்சினைகள் மற்றும் யுத்தத்தின் பின்னர் உருவான ஏனைய பிரச்சினைகளுக்காக தீர்வை காண்பது, அதனை சர்வதேசத்துக்கு கொண்டு செல்வது என்பவற்றை தேசிய பொறிமுறை மூலம் நம்பிக்கையான கலந்துரையாடல் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

தற்போது கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் டயஸ்போராக்களின் தலைவர்களுடன் பேச்சு நடத்தியுள்ளேன். கலந்துரையாடல் மூலம் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இன, மத மற்றும் மொழி ரீதியாக மோதல்கள் ஏற்படுவதை தடுத்து மக்களிடையே ஒற்றுமை,நல்லிணக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும் நோக்கில் புதிய சட்ட கட்டமைப்பு ஒன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.” – எனவும் அமைச்சர் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...