நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தனிப்படை பிரிவொன்று நிறுவப்படவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காமண்டோ, பொலிஸ் அதிகாரிகள், புலனாய்வாளர்கள் மற்றும் இராணுவத்தினரை உள்ளடக்கிய வகையிலேயே குறித்த படை பிரிவு அமையவுள்ளது.
ஜுலை 14 ஆம் திகதி நாட்டைவிட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச, நேற்று நள்ளிரவு நாடு திரும்பினார்.
#SriLankaNews