ranil
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியை சந்திக்கின்றன தொழிற்சங்கங்கள்

Share

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து சாதகமான பதில் கிடைத்ததையடுத்து, தொழிற்சங்க கூட்டமைப்பு வியாழக்கிழமை (16) காலை தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட்டுள்ளது.

அடுத்த வார முற்பகுதியில் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி விரும்புகிறார் என்று ஜனாதிபதி செயலகம் எழுத்துமூலம் தெரிவித்ததையடுத்து தாங்கள் வேலைநிறுத்தத்தை நிறுத்தியதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது.

தொழிற்சங்கத்தின் பங்குதாரர்கள், தமது எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்கும், அவர்களின் செயற்திட்டத்துக்கான காலவரையறையை நிர்ணயம் செய்வதற்கும் தற்போது கூட்டமொன்றை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமது நடவடிக்கையை நிறுத்தினாலும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம்  தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமது கோரிக்கைகளை சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி அரசாங்கம் வழங்குk் என்று ஜனாதிபதி செயலாளர் தமக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில் சில தொழிற்சங்கங்கள் மாத்திரம் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டது.

சுகாதாரம், மின்சாரம் மற்றும் எரிசக்தி, கல்வி, துறைமுகங்கள், தபால் சேவைகள் போன்ற துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தில் ஈடுபட்டமையால் பொதுமக்கள் கடும் சிரமங்கை எதிர்கொண்டனர்.

வியாழக்கிழமை காலை வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், ரயில் பற்றாக்குறை காரணமாக பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகியதாக தெரியவருகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...