foods
இலங்கைசெய்திகள்

பாவனைக்கு தகுதியற்ற உணவுகள் – உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை

Share

இலங்கையிலுள்ள சுமார் 18% உணவகங்கள் திருப்தியற்ற நிலையில் உள்ளதாக இலங்கையின் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவிக்கையில்,

“இலங்கையில் தற்போதுள்ள 18% ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் திருப்தியற்ற நிலையில் உள்ளன. குறிப்பாக மனித நுகர்வுக்குத் தகுதியற்ற உணவுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் 27% சராசரி நிலையிலும் மற்றும் 55% மிகவும் சிறந்த நிலையிலும் உள்ளன.

இலங்கையின் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், 2022ம் ஆண்டு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உணவு நுகர்வு வகைப்பாடு அமைப்பு படிவத்தின் கணக்கெடுப்பு தரவுகளின்படி இந்தத் தரவு வெளியிடப்படுகிறது.

தரவுகளின்படி, A பிரிவில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் 55% மும், B பிரிவில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் 27% மும், மற்றும் C பிரிவில் திருப்தியற்ற நிலையில் 18 சதவீதமான ஹோட்டல் மற்றும் உணவகங்கள் உள்ளன.

மனித நுகர்வுக்குத் தகுதியற்ற உணவை உற்பத்தி செய்யும் 18% ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அபிவிருத்தி செய்வதற்காக அவற்றை குறைந்தபட்சம் B வகைக்கு கொண்டு வருவதற்காக தேவையான அறிவுறுத்தல்கள், ஒழுங்குபடுத்தல்கள் போன்று தேவைப்படும்போது சட்ட நடவடிக்கை எடுப்பது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.- என்றார்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
24 6718a970f1422
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு தாழங்குடாவில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதல்: சஹ்ரான் குழுவின் வெடிகுண்டு சோதனை நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பரபரப்பு!

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் சஹ்ரான் குழுவினரால் வெடிகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தை அண்மித்த ஒரு...

Romance Scams in Canada 1024x560 1
செய்திகள்உலகம்

கனடா ஒன்றாரியோவில் மோசடிகள் அதிகரிப்பு: நோர்த் பேயில் ஒருவரிடம் $250,000 மோசடி – காவல்துறை எச்சரிக்கை!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த...

images 9
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலில் இரசாயனம் கலந்த நீர்த்தாரை தாக்குதல்: 3 இலங்கை பணியாளர்கள் பாதிப்பு – பாதுகாப்பிற்கு தூதரகம் கோரிக்கை!

இஸ்ரேலில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட இரசாயனம் கலந்த நீர்த்தாரைப் பிரயோகத்தின் (Chemical Spray/Water...

images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...