16 4
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட பாதாள உலக தலைவர்கள்

Share

வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட பாதாள உலக தலைவர்கள்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெலாரஸில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக்கும்பலின் தலைவன் லொக்கு பட்டி என்ற சுஜீவ ருவன் குமார அந்நாட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் அந்நாட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் ஒரு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை பாதாள உலகக் குழு உறுப்பினர் லொகு பட்டி என்பவரால் வழி நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தென் மாகாணத்தை மையமாக கொண்ட பல கொலைகளுக்கு பின்னணியில் லொகு பட்டி மூளையாக செயல்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்.

மேலும், பெலாரஸ் நாட்டின் மற்றுமொரு பகுதியில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானை இம்ரான் மற்றும் ரொம்ப அமில ஆகியோரை பாதுகாப்புப் படையினர் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், காஞ்சிபனை உள்ளிட்ட சந்தேகநபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...