17 4
இலங்கைஉலகம்செய்திகள்

கோட்டாபயவை போன்றே நாட்டில் இருந்து வெளியேறிய சேக் ஹசீனா

Share

கோட்டாபயவை போன்றே நாட்டில் இருந்து வெளியேறிய சேக் ஹசீனா

அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து பங்களாதேஷின் பிரதமர் சேக் ஹசீனா (Sheikh Hasina) திங்களன்று பதவி விலகியமையும், இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேறியமையும் ஒரே தன்மை கொண்ட சம்பவங்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இடஒதுக்கீட்டுப் போராட்டங்கள், இறுதியில் பிரதமருக்கு எதிரான போராட்டங்களாக மாறிய நிலையிலேயே ஹசீனாவின் பதவி விலகலும் நாட்டில் இருந்து வெளியேறிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

எனினும் கோட்டாபய ராஜபக்ச, வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பாக சென்ற பின்னரே தமது பதவி விலகலை அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள நிலைமை, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த எச்சரிக்கையின் நிமித்தம், பங்களாதேஷ் உடனான தொடருந்து சேவைகளை இந்தியா நிறுத்தியுள்ளது.

முன்னதாக ஜூலை நடுப்பகுதியில் இருந்து அரச வேலைகளுக்கான ஒதுக்கீட்டை இரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்திய பொலிஸாருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வன்முறை மோதல்களின் போது பங்களாதேஷில் குறைந்தபட்சம் 91 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...