banthula
இலங்கைசெய்திகள்

தேசிய மட்டத்தில் உள்ளாடை உற்பத்தி – சதொச ஊடாக விற்பனை!!

Share

தேசிய மட்டத்தில் உள்ளாடை உற்பத்தி – சதொச ஊடாக விற்பனை!!

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் 623 அத்தியாவசியமற்ற பொருள்களின் உத்தரவாத தொகையை அதிகரித்தமையால் உள்ளாடை பாவனைக்கு தட்டுப்பாடு மற்றும் விலை என்பவை அதிகரிக்கப்படாது.

தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யும் உள்ளாடைகளை சதொச விற்பனை நிலையம் ஊடாக குறைந்த விலைக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணியை அதிகரிக்கவே இறக்குமதி செய்யும் 623 பொருள்களின் உத்தரவாத விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை இறக்குமதி செய்ய தடைவிதிக்கவில்லை.
தற்போது சமூக வலைத்தளத்தில் உள்ளாடைக்கு தட்டுப்பாடு ஏற்படப் போகிறது என கீழ்த்தரமாக பதிவிட்டு வருகின்றனர்.

இவ்வாறான பதிவுகள் இலங்கையின் தேசிய மட்டத்திலான ஆடைத்தொழில் துறையை அவமதிப்பனவாக உள்ளன. அத்துடன் இலங்கை ஆடைகளுக்கு உலக சந்தையில் அதிக கேள்வி நிலவுகிறது. தேசிய மட்டத்தில் தைக்கப்படும் உயர்தர ஆடைகளை குறைந்த விலையில் மக்கள் பெறுகிறாகள்.

இலங்கையில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளுக்கு உலக சந்தையில் அதிக கேள்விகள் எழுகின்றன. இவ்வாறான நிலையில் உள்ளாடைக்கு பற்றாக்குறை என குறிப்பிடப்படும் பதிவுகள் மற்றும் கருத்துக்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.

நாட்டிலேயே பாவனைக்கு தேவையான உள்ளாடைகள் போதுமான அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன என பிரதான நிலை உள்ளாடை உற்பத்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

எக்காரணம் கொண்டும் உள்ளாடைகளுக்கு தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு ஏற்படாது என்பதை தெரிவிக்கின்றேன்.

அத்துடன் சதொச விற்பனை நிலையம் ஊடாக உள்ளாடைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...