tamilnaadi 109 scaled
இலங்கைசெய்திகள்

மீகொட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது

Share

மீகொட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் பெண் ஊழியர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு ஆதரவான வர்த்தகர் உட்பட இரு சந்தேகநபர்கள் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீகொட பொருளாதார நிலையத்தில் பணத்தை கொள்ளையடித்துவிட்டு, பூகொடையில் உள்ள வர்த்தகர் ஒருவரிடமிருந்து சில தங்க ஆபரணங்களை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்று மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் பேரில் கைதான வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான உணவகத்தில் மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உள்ளிட்ட இருவருக்கு அடைக்கலம் கொடுத்த நபரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கடவட பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரான 39 வயதுடைய நபரும் 44 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Share
தொடர்புடையது
6 10
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் பொலிஸாரை தாக்கிய பெண்கள் உட்பட ஐவருக்கு விளக்கமறியல்

மட்டு. சின்ன ஊறணி (வன்னியில்) பகுதியில் திருடனை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது கத்திக்குத்து...

3 12
இலங்கைசெய்திகள்

மனிதர்களுக்கு ஏற்படப்போகும் கொடிய ஆபத்து.. உலகை பீதியில் ஆழ்த்தியுள்ள பாபா வங்காவின் கணிப்பு

2088ஆம் ஆண்டில், பூமியில் ஒரு அறியப்படாத வைரஸ் பரவும் எனவும் அந்த வைரஸ் காரணமாக மனிதர்கள்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...