24 667944cf387a7
இலங்கைசெய்திகள்

விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவருக்கு சீன பிரஜைகள் இருவரால் நேர்ந்த கதி

Share

விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவருக்கு சீன பிரஜைகள் இருவரால் நேர்ந்த கதி

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (United Arab Emirates) இருந்து இலங்கை நோக்கி பயணித்த விமானத்தில் இலங்கையர் ஒருவரின் பயணப் பொதியிலிருந்து தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை திருடியதாக கூறப்படும் சீன (China) பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சீன பிரஜைகள், இலங்கையரிடம் இருந்து இரண்டு வைர மோதிரங்கள், தங்கச் சங்கிலி, தங்க மோதிரம், தங்கப் பதக்கம் மற்றும் கைக்கடிகாரம் உள்ளிட்ட 1.1 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த இலங்கையர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) அபுதாபியில் இருந்து இலங்கைக்கு சீன பிரஜைகளுடன் பயணித்ததாகவும், தனது பையை ஆசன எண் 09இற்கு மேலே உள்ள விமான மேல்நிலை கேரியரில் வைத்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தரையிறங்கும் நேரத்தில் தனது பொருட்கள் காணாமல் போனது அறிந்து, இலங்கை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், அந்த விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் சோதனை செய்யப்பட்டனர்.

இதற்கமைய, சோதனையின் போது, ​​31 மற்றும் 36 வயதுடைய சீன பிரஜைகள் இருவரிடமும் திருடப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்தே குறித்த இருவரும் விமான நிலையப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....