1631974911 Manusha Nanayakkara notified to appear before CID L
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தை தகர்க்க வந்தவர்களுடனேயே அரசு அமைப்பதற்கு முயற்சி! – சஜித்தை சாடுகிறார் மனுஷ

Share

நாடாளுமன்றத்தை தகர்ப்பதற்காக, பெக்கோ இயந்திரத்துடன் வந்தவர்களுடனேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசு அமைப்பதற்கு முயற்சிப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை தகர்ப்பதற்காக பெக்கோ இயந்திரத்தை கொண்டு வந்தனர். இராணுவத்தினருக்கு அதிகாரம் இல்லாதிருந்தால், நாடாளுமன்றம் என்ற வெறும் கட்டிடமல்ல, நாட்டின் ஜனநாயகமே சிதைவடைந்திருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

” ஜனாதிபதியை தெரிவு செய்யும்போது ஐக்கிய மக்கள் சக்தி ஒரு பட்டியலை தயாரித்திருந்தது. அந்த பட்டியல் தற்போது என்னிடம் உள்ளது. அதில் 118 வாக்குகள் டளஸ் அழகப் பெருமவுக்கும் அதைவிட குறைந்த வாக்குகளே ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கிடைக்கும் என பதிவு செய்யப்பட்டுள்ளது. தமது கட்சியினர் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது தெரியாமலேயே, எதிர்க்கட்சித் தலைவர் செயல்பட்டுள்ளார்.” – எனவும் மனுச குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...