மீண்டும் வழங்கப்படும் திரிபோஷ!
இலங்கைசெய்திகள்

மீண்டும் வழங்கப்படும் திரிபோஷ!

Share

மீண்டும் வழங்கப்படும் திரிபோஷ!

திரிபோஷ வழங்கும் நடவடிக்கை மீண்டும் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆறு மாதம் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு இவ்வாறு திரிபோஷா வழங்கப்படவுள்ளது.

திரிபோஷ தயாரிப்பில் இருக்க வேண்டிய அஃப்லாடாக்சிகோசிஸின் அளவு தொடர்பான பிரச்சினையால் ஒரு வருடத்திற்கு மேல் நிறுத்தப்பட்டதாக திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்தார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் பல அதிகாரிகளின் இழுபறி காரணமாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான நீண்டகால கலந்துரையாடல்கள் தற்போது வெற்றிகரமான மட்டத்தில் உள்ளது, இம்மாத இறுதியில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

இதன்படி, ஆறு மாதம் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு தேவையான மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் திரிபோஷ பொதிகளை வழங்குவதற்கான உற்பத்தி நடவடிக்கைகளை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க முடியும் என்று திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...