மீண்டும் வழங்கப்படும் திரிபோஷ!
இலங்கைசெய்திகள்

மீண்டும் வழங்கப்படும் திரிபோஷ!

Share

மீண்டும் வழங்கப்படும் திரிபோஷ!

திரிபோஷ வழங்கும் நடவடிக்கை மீண்டும் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆறு மாதம் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு இவ்வாறு திரிபோஷா வழங்கப்படவுள்ளது.

திரிபோஷ தயாரிப்பில் இருக்க வேண்டிய அஃப்லாடாக்சிகோசிஸின் அளவு தொடர்பான பிரச்சினையால் ஒரு வருடத்திற்கு மேல் நிறுத்தப்பட்டதாக திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்தார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் பல அதிகாரிகளின் இழுபறி காரணமாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான நீண்டகால கலந்துரையாடல்கள் தற்போது வெற்றிகரமான மட்டத்தில் உள்ளது, இம்மாத இறுதியில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

இதன்படி, ஆறு மாதம் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு தேவையான மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் திரிபோஷ பொதிகளை வழங்குவதற்கான உற்பத்தி நடவடிக்கைகளை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க முடியும் என்று திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...