rtjy 290 scaled
இலங்கைசெய்திகள்

திருகோணமலையில் விறகு வெட்ட சென்றவரை தாக்கிய கரடி

Share

திருகோணமலையில் விறகு வெட்ட சென்றவரை தாக்கிய கரடி

திருகோணமலையில் கரடி தாக்குதலுக்கு உள்ளான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் திருகோணமலை – திரியாய் காட்டுப்பகுதியில் இன்று (28.09.2023) ,மாலை இடம் பெற்றுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது படுகாயமடைந்தவர் கும்புறுபிட்டி – நாவல்சோலை பகுதியைச் சேர்ந்த 41 வயதையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான என். செல்வராசா என தெரிய வருகின்றது.

அத்துடன் படுகாயம் அடைந்து நபர் விறகு வெட்டுவதற்காக காட்டுக்குச் சென்ற நிலையில் கரடி தாக்கியதால் சுய நினைவற்ற நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பிரதேசத்தில் கரடிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...