tranfer 150x150 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் பிரதேச செயலர்களுக்கு இடமாற்றம்!

Share

யாழ்ப்பாணத்தில் ஐந்து பிரதேச செயலர்களுக்கும் ஒரு மேலதிக மாவட்ட செயலருக்கும் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.

அந்த வகையில் யாழ். மாவட்டத்தில் 18 வருடங்களாக கடமையாற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் மஞ்சுளாதேவி சதீசன் , நல்லூர் பிரதேச செயலர் அன்ரன் எழிலரசி மற்றும் யாழ். மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்(காணி) முரளிதரன் ஆகியோருக்கே இடமாற்றங்கள் வழங்கப்படவுள்ளன.

அதேபோல் யாழ். மாவட்டத்தில் சுமார் 15 வருடங்களாக தெல்லிப்பழை பிரதேச செயலர் சண்முகராஜா சிவசிறி , சங்கானை பிரதேச செயலர் பொன்னம்பலம் பிறேமினி மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலர் சாம்பசிவம் சுதர்சன் ஆகியோர் கடமையாற்றியுள்ளனர்.

இவர்களில் ஒரே பிரதேச செயலகப் பிரிவில் 6 வருடங்கள் கடமையாற்றியவர்களுக்கு மாவட்டத்துக்குள் இடமாற்றமும் மாவட்டத்தில் 12 வருடங்களுக்கு மேல் கடமையாற்றியவர்களுக்கு மாகாண மட்டத்தில் இடமாற்றமும் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறான இடமாற்றங்களால் ஒரே தடவையில் பலர் மாகாணத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படவுள்ளது.

இவர்களின் இடத்தை நிரப்புவதற்கு வெளி மாகாணங்களில் இருந்து விண்ணப்பிப்பவர்களும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...