செய்திகள்இலங்கை

இன்று காலை நடந்த சோக சம்பவம்!-

Accident 02
Share

கிளிநொச்சி ஏ-9 வீதியின் பாடசாலை பக்கம் மஞ்சள் கடவையில் வீதியை கடந்த போது ஏற்பட்ட விபத்தில் மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மற்றுமொரு மாணவி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ-9 வீதியின் மேற்குப் பகுதியிலிருந்து பாடசாலை பக்கம் மஞ்சள் கடவையில் வீதியை கடந்த போதே இவ்விபத்து சம்பவம் இன்று ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் க.பொ.த சாதாரண தரம் கல்வி கற்ற மாணவிகள் மூவர் உயர்தரம் கல்விக்காக கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அனுமதி பெறுவதற்காக பாடசாலைக்கு வருகை தந்த போது இந்த துன்பியல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Accident 03

வீதியை கடக்க முற்பட்ட போது ஏ-9 வீதியில் பயணித்த பட்டா ரக வாகனம் மாணவிகள் கடந்து செல்வதற்காக நிறுத்தியது.

இதன் பின் வந்த மின்சார சபை ஒப்பந்தகாரருடைய ஹன்ரர் ரக வாகனமும் நிறுத்தியிருந்த போது, பின்னால் வந்த இலங்கை போக்கு வரத்து சபையின் பேருந்து ஹன்ரர் ரக வாகனத்தை மோதியது.

ஹன்ரர் வாகனம் பட்டாவுடன் மோதி குறித்த வாகனங்கள் இரண்டும் மாணவிகளுடன் மோதி இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலயே திருவாசகம் மதுசாளினி (வயது 17 ) என்ற மாணவி இறந்ததுடன் மற்றொரு மாணவி காயமடைந்துள்ளார்.

குறித்த மாணவியின் தந்தை துவிச்சக்கர வண்டியில் நாளாந்தம் ஊற்றுப்புலத்திலிருந்து கிளிநொச்சி விறகு வெட்டி விற்பனை செய்யும் தொழிலாளி மிகவும் வறுமைக்குட்பட்டவர்.

இந்நிலையில் தனது மகளை உயர்தரத்திற்கு கற்பித்து அனுப்பிய நிலையில் முதல் நாளே இப் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....