1637641405 1637639962 Trinco L L 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிண்ணியா பகுதியில் ஏற்பட்ட சோகம்! -தொடர்ந்து தேடுதல் பணி!

Share

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் மோட்டார் இழுவை படகு கவிழ்ந்ததில் ஐவர் பலியாகியுள்ளதாக கிண்ணியா ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிண்ணியா குருஞ்சஙகேணி பிரதேசத்தில் பால நிர்மாண பணிகள் இடம்பெற்றுவருவதால் அவ்விடத்தில் சேவையில் இருந்த மோட்டார் இழுவைபடகே இவ்வாறு கவிழ்ந்துள்ளது.

கிண்ணியா ஆதார வைத்தியசாலை பேச்சாளர் கொழும்பில் உள்ள செய்தி சேவையொன்றுக்கு வழங்கிய செய்தியில் இன்னும் சிலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், சிலரின் நிலை கவலைகிடமாக உள்ளதாகவும் தெரியவருகிறது.

தற்போது கிடைத்த தகவலை தொடர்ந்து தற்போது வரை  7 மரணங்கள் உறுதியாகியுள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர்கள் பாடசாலை மாணவர்கள் எனவும் தகவல்கள்  தெரிய வருகிறது.

குறித்த விபத்தில் இன்னும் சிலர் பலியாகியிருக்ககூடும் என்ற சந்தேகத்தில் தேடுதல் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளமை அறியமுடிகிறது.

258405565 3109232792733004 8510361429737196141 n 260074979 437701957883160 614129706809049115 n 260127018 437701714549851 2992022834575669083 n

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...