Sajith
இலங்கைஅரசியல்காணொலிகள்செய்திகள்பிராந்தியம்

சஜித் பிரேமதாசவின் 55 ஆவது பிறந்தநாள் இன்று!

Share

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் 55 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.

இதனை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று சர்வமத வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நல்லூர் கோவிலுக்கு சென்ற சஜித் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

1967 ஜனவரி 12 ஆம் திகதி பிறந்த சஜித் பிமேதாச, கொழும்பு றோயல் கல்லூரியில் பாடசாலை கல்வியை மேற்கொண்டார். லண்டனில் உயர் கல்வியை பயின்றார்.

இலங்கையின் 2ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான அமரர் ரணசிங்க பிரேமதாசவின் மகனான சஜித் பிரேமதாச, 1993 ஆம் ஆண்டு முதல் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுவருகின்றார்.

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் களமிறங்கிய அவர் வெற்றிபெற்றார். ஐக்கிய தேசியக்கட்சி அரசில் பிரதி அமைச்சராக பதவி வகித்தார்.

2011 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியை வகித்தார்.

2019 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளராகக் களமிறங்கினார். எனினும், அவரால் வெற்றிபெற முடியவில்லை.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சி பிளவு பட்டது. சஜித் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி உதயமானது.

2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களை வென்றது. தற்போது சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டுவருகின்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....