tissa vitharana
இலங்கைஅரசியல்செய்திகள்

அரசின் முடிவு ஏற்புடையதல்ல என்கிறார் திஸ்ஸ வித்தாரண

Share

உள்ளாட்சிசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் முடியாவது ஏற்புடையதல்ல – என்று அரச பங்காளிக்கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளாட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி கட்சியின் பிரமுகரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ வித்தாரண கூறியவை வருமாறு,

” உரிய காலப்பகுதிக்குள் ,உரிய வகையில் தேர்தலை நடத்துவதே சிறந்த ஜனநாயக பண்பாகும். அந்த வகையில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதை ஏற்கமுடியாது.

எனினும், விசேட காரணமொன்றுக்காக, அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் குறுகிய காலப்பகுதிக்கு அதனை செய்யலாம்.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறு செய்வதற்கான தேவை எழவில்லை. அந்தவகையில் பதவி காலம் நீடிப்பானது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” – என்றார்.

அதேவேளை, அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் உள்ளாட்சிமன்ற தேர்தல் ஒத்திவைப்புக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...