image 198c08bba6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதுக்குடியிருப்பில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்து! – இருவர் பலி – ஒருவர் படுகாயம்

Share

டிப்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் கேப்பாபிலவு – புதுக்குடியிருப்பு வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது என முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

வற்றாப்பளை பகுதியில் இருந்து கேப்பாபிலவு பகுதி நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர், எதிர்த்திசையில் வந்த டிப்பருடன் மோதிய நிலையில் விபத்து நிகழ்ந்துள்ளது.

டிப்பர் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிலக்குடியிருப்பு கேப்பாபிலவை சேர்ந்த கிருஸ்ணசாமி மாரிமுத்து (வயது -48), அதே இடத்தைச் சேர்ந்த சூரியகுமார் கரிதாஸ் (வயது-17) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, படுகாயமடைந்த இளைஞன் ஆனந்தபுரம் புதுக்குடியிருப்பை சேர்ந்த சண்முகம் நிறோஜன் (வயது-22) என தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து டிப்பர் வாகனத்தை எடுத்துச்செல்ல அனுமதிக்காது அவ்விடத்தில் மக்கள் கூடியமையால் அவ்விடத்தில் பொலிஸாருக்கும் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

image 405a87e8d2

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...