DSC02387 600x338 1
செய்திகள்இலங்கை

மூன்று வாகனங்கள் விபத்து! – 6 பேர் காயம்

Share

நுவரெலியா – ஹற்றன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு வீதியில் ஏற்பட்ட விபத்தொன்றில் 6 பேர் காயமடைந்துள்ளனர் .

இந்த விபத்து இன்று (30) காலையில் இடம்பெற்றுள்ளது .

நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற வேன் ஒன்று தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதி நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதி அருகில் இருந்த மண்மேட்டுடன் மோதி வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி குடைசாய்ந்துள்ளது.

தலவாக்கலை பகுதிலிருந்து நுவரெலியா பகுதி நோக்கி குறித்த முச்சக்கரவண்டி சென்றுள்ளது

இந்த விபத்தில் குடைசாய்ந்த வேனில் பயணித்த நால்வர் ,முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் என அறுவர் காயமடைந்துள்ளனர் .

நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற வேனில் ஏற்பட்ட இயந்திர கோளாறு இவ் விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பகாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1632986800 acdnt 2

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...