9 14
அரசியல்இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு கோரி அச்சுறுத்தல்: ஆரம்பமாகும் விசாரணை

Share

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு கோரி அச்சுறுத்தல்: ஆரம்பமாகும் விசாரணை

தபால் மூல வாக்களிப்பின் போது தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு பல அரச உத்தியோகத்தர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரே அவ்வாறு அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டின் பிரதானி சட்டத்தரணி திலின பெர்னாண்டோவினால் தேர்தல் ஆணையாளர் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (தேர்தல்கள்) ஆகியோரிடம் இது தொடர்பில் முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்குப்பதிவில் செல்வாக்கு செலுத்துவது தேர்தல் விதிகளை மீறும் செயல் என்பதால், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த முறைப்பாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...