katunayake airport
இலங்கைசெய்திகள்

போலி விசாவில் லண்டன் செல்ல முயற்சித்தோர் கைது! – இருவர் யாழ்ப்பாணம்

Share

போலி விசாவைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குச் செல்ல முயன்ற மூன்று இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மல்லாவி ஆகிய பகுதிகளில் வசிக்கும் 23 மற்றும் 31 வயதுடைய பயணிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இந்த மூன்று இலங்கையர்களும் லண்டன் செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் தங்களுடைய குடிவரவு நடைமுறைகளை சரிசெய்வதற்காக விமான நிலையத்தில் உள்ள குடிவரவு கவுண்டருக்கு வந்திருந்தனர்.

கடமையில் இருந்த குடிவரவு அதிகாரிகள், அவர்களது பயண ஆவணங்களை ஆய்வு செய்த போது, ​​விசாக்கள் போலியானது என கண்டறிந்தனர். இதையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் விசாரணைகளுக்காக கட்டுநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எல்ல லிட்டில் எடம்ஸ் பீக்: 100 அடி பள்ளத்தில் விழுந்த வெளிநாட்டு சிறுமி உயிருடன் மீட்பு!

பதுளை – எல்ல பகுதியில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லிட்டில் எடம்ஸ் பீக் (Little...

1729389794 Fake Notes L
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் துணிகரம்: மரக்கறி வியாபாரியிடம் 5,000 ரூபா போலித் தாளைக் கொடுத்து மோசடி!

மட்டக்களப்பு, பார் வீதியில் வீதியோரம் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த மரக்கறி வியாபாரி ஒருவரிடம், போலி 5,000 ரூபா...

Japan arrest
உலகம்செய்திகள்

ஜப்பானில் கொள்ளைச் சம்பவம்: 30 வயது இலங்கையர் கைது!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பெண் ஒருவரைத் தாக்கி கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 30 வயதான இலங்கையர் ஒருவர்...

TIN 250401
செய்திகள்இலங்கை

வாகனப் பதிவு மற்றும் உரிமை மாற்றத்திற்கு TIN இலக்கம் கட்டாயம்: மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவிப்பு!

இலங்கையில் வாகனங்களைப் பதிவு செய்யும் நடைமுறைகளில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், வரி...