பஸில் ராஜபக்சவை பாதுகாக்க முற்பட்டவர்களே அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை எதிர்க்கின்றனர் – என்று விமல் வீரசன்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் முழுமையாக திருப்திகொள்ள முடியாவிட்டாலும், அதில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சில விடயங்களும் உள்ளன. எனவே, அதனை ஆதரிக்க வேண்டும். எனினும், பஸிலை ஆதரிக்க நினைப்பவர்களே 22 ஐ எதிர்க்கின்றனர்.” – என்றும் விமல் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஜனாதிபதியின் தேவைக்கேற்பவே 22 முன்வைக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment