Johnston Fernando
இலங்கைஅரசியல்செய்திகள்

சுசிலைப் பதவி நீக்கியது இதனால் தான்: உண்மையைப் போட்டுடைத்த அமைச்சர்!

Share

அரசையும் , அதன் கொள்கையையும் விமர்சித்ததாலேயே இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ளார் – என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

” நாம் அணியாக இணைந்து செயற்படும்போது ஏதேனும் பிரச்சினை இருப்பின் அந்த அணிக்குள்தான் கதைக்க வேண்டும். அதைவிடுத்து வெளியில் சென்று விமர்சனங்களை முன்வைப்பது ஏற்புடையதல்ல. கூட்டு பொறுப்பு என்றால் என்னவென்று புரியாவிட்டால் பதவிகளை வகித்து பயன் இல்லை.

சுசில் பிரேமஜயந்த அரசையும், கொள்கையையும், விவசாய அமைச்சையும் விமர்சித்துள்ளார். அதனால்தான் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.” என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

அதேவேளை, அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்ற கவலையில்தான் சுசில் பிரேமஜயந்த விமர்சனங்களை முன்வைத்து, டபள் கேம் ஆடினார்.

2015 இல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் மைத்திரி பக்கம் தாவியவரே அவர்.” – என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவும் குறிப்பிட்டார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...