Johnston Fernando
இலங்கைஅரசியல்செய்திகள்

சுசிலைப் பதவி நீக்கியது இதனால் தான்: உண்மையைப் போட்டுடைத்த அமைச்சர்!

Share

அரசையும் , அதன் கொள்கையையும் விமர்சித்ததாலேயே இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ளார் – என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

” நாம் அணியாக இணைந்து செயற்படும்போது ஏதேனும் பிரச்சினை இருப்பின் அந்த அணிக்குள்தான் கதைக்க வேண்டும். அதைவிடுத்து வெளியில் சென்று விமர்சனங்களை முன்வைப்பது ஏற்புடையதல்ல. கூட்டு பொறுப்பு என்றால் என்னவென்று புரியாவிட்டால் பதவிகளை வகித்து பயன் இல்லை.

சுசில் பிரேமஜயந்த அரசையும், கொள்கையையும், விவசாய அமைச்சையும் விமர்சித்துள்ளார். அதனால்தான் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.” என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

அதேவேளை, அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்ற கவலையில்தான் சுசில் பிரேமஜயந்த விமர்சனங்களை முன்வைத்து, டபள் கேம் ஆடினார்.

2015 இல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் மைத்திரி பக்கம் தாவியவரே அவர்.” – என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவும் குறிப்பிட்டார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
31 8
இலங்கைசெய்திகள்

மீண்டும் பேருந்துகளில் இருந்து நீக்கப்படவுள்ள அலங்கார பொருட்கள்..!

வீதி விபத்துகளைக் குறைத்து, நெறிப்படுத்தப்பட்ட போக்குவரத்து முறையை நிறுவும் நோக்கில் ஜூலை 1ஆம் திகதி முதல்...

32 8
இலங்கைசெய்திகள்

இலங்கையில் புதிய கோவிட் திரிபு பரவுமா..! சுகாதார அமைச்சு விளக்கம்

இலங்கையில் புதிய கோவிட் – 19 திரிபு பரவும் அபாயம் இல்லை என சுகாதார மற்றும்...

30 8
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த மனைவி நடந்தது என்ன…! தவிக்கும் கணவன்

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளமை குறித்து...

29 9
இலங்கைசெய்திகள்

ஒரே சிறை அறையில் அடைக்கப்பட்ட தந்தையும் மகனும்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித ரம்புக்வெல்லவும் கொழும்பு சிறைச்சாலையின் M2...