gota ranil 2
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணில் – ராஜபக்‌ஷ அரசாங்கமே இது!

Share

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உருவாக்கப்பட்ட அரசாங்கம் சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கி செல்கின்றது. இந்த அரசாங்கம் ரணில் – ராஜபக்‌ஷ அரசாங்கம் என்பதில் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை என ஆளுங்கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இப்போதும் ரணில் -ராஜபக்‌ஷ அரசாங்கமே ஆட்சி செய்து வருகின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள ராஜபக்‌ஷ  அணியும், ரணில் விக்கிரமசிங்க என்ற தனி ஒருவரும் இணைந்து அரசாங்கத்தை கொண்டு செல்கிறோம். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை, அடுத்த தேர்தலிலும் மீண்டும் இரு தரப்பும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைக்க முடியும். இதன்போது  மேலும் பல கட்சிகளுடன் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ  ஆகிய இருவருமே அனுபவம் வாய்ந்தவர்கள். எமது அணியும் அனுபவம் மிக்க அணியாக உள்ளது. ஆகவே இருவரும் இணைந்து பயணிப்பதுடன் மேலும் ஏழு அல்லது எட்டு கட்சிகளை ஒன்றிணைத்து  பயணிக்க பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...