தேசபந்து தென்னக்கோன்
அரசியல்இலங்கைசெய்திகள்

தென்னக்கோனுக்கு 2 வாரங்கள் விடுமுறை! – சட்டமா அதிபரின் உத்தரவு கிடப்பில்

Share

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறையில் செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கடந்த வாரம் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை தேவை என அறிவித்திருந்தார்.

விடுமுறைக்கு அனுமதி கிடைத்ததையடுத்து, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் கடமைகளை உள்ளடக்கியதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜகத் பலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் மேல்மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரை மேல் மாகாணத்தில் இருந்து நீக்குமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சட்டமா அதிபர் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாதது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது எனப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்து ஒரு வாரத்துக்கு மேலாகியும் இதுவரை அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....