யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், இன்று முற்பகல் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.
குறித்த சந்திப்பின்பொது, காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அவர்களது உறவினர்களிடம் கேட்டு அறிந்ததுடன். உள்நாட்டுப் போரின் போது குடும்ப உறுப்பினர்களை இழந்த மக்களின் இதயத்தை உடைக்கும் கவலைகளை நேரடியாகக் கேட்டேன் என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய இரண்டும் மிக அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment