download 5 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மரமேறியவர் மரத்திலே உயிாிழப்பு!

Share

கித்துள் மரத்தில் ஏறிய கள் இறக்குபவர் மரத்திலேயே உயிரிழந்ததுடன் பொது மக்களின் உதவியுடன் பொலிஸார் சடலத்தைக் கீழே இறக்கிய சம்பவம் ஒன்று பிட்டிகல பகுதியில் பதிவாகியுள்ளது.

உயிரிழந்த நபரான 63 வயதான ரணசிங்க வீரக்கொடி பிட்டிகல, பொரொகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். வீட்டின் முன் நின்ற கித்துள் மரத்தில் ஏறியவர் மரத்திலேயே உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் பொலிஸாருக்குத் தெரிவித்தனர்.

அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக எல்பிட்டிய நீதிமன்ற மருத்துவ அதிகாரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....