Elephant attack01
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யானையின் தாக்குதலுக்கு இலக்கானவர் படுகாயம்!

Share

மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள முறாவோடை கிராமத்தினுள் நுழைந்த யானை ஒருவரைத் தாக்கியுள்ளது.

யானையின் தாக்குதலுக்கு இலக்கான ஆண் படுகாயமடைந்த நிலையில், மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்;

கிண்ணையடிப் பகுதியைச் சேர்ந்த இருவர் கடலில் மீன்பிடிப்பதற்றாக இன்று (16) அதிகாலை 3.30 மணியளவில் வீட்டில் இருந்து துவிச்சக்கரவண்டியில் கடலை நோக்கி சென்று கொண்டிருந்தபோதே யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

Elephant attack

இருவரும் சைக்கில் இருந்து வீழ்ந்ததையடுத்து, ஒருவர் படுகாயமடைந்ததுடன் ஒருவர் அங்கிருந்து தெய்வாதீனமாகத் தப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த இருவரும் சென்ற துவிச்சக்கரவண்டியை யானை மிதித்து சேதப்படுத்தியுள்ளதுடன், அந்தப் பகுதி வேலிகளையும் சேதப்படுத்தியுள்ளது.

இதேவேளை இச்சம்பவத்தின் போது, இதில் 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான கேசவராசா ததீஸ்கரன் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...