Elephant attack01
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யானையின் தாக்குதலுக்கு இலக்கானவர் படுகாயம்!

Share

மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள முறாவோடை கிராமத்தினுள் நுழைந்த யானை ஒருவரைத் தாக்கியுள்ளது.

யானையின் தாக்குதலுக்கு இலக்கான ஆண் படுகாயமடைந்த நிலையில், மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்;

கிண்ணையடிப் பகுதியைச் சேர்ந்த இருவர் கடலில் மீன்பிடிப்பதற்றாக இன்று (16) அதிகாலை 3.30 மணியளவில் வீட்டில் இருந்து துவிச்சக்கரவண்டியில் கடலை நோக்கி சென்று கொண்டிருந்தபோதே யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

Elephant attack

இருவரும் சைக்கில் இருந்து வீழ்ந்ததையடுத்து, ஒருவர் படுகாயமடைந்ததுடன் ஒருவர் அங்கிருந்து தெய்வாதீனமாகத் தப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த இருவரும் சென்ற துவிச்சக்கரவண்டியை யானை மிதித்து சேதப்படுத்தியுள்ளதுடன், அந்தப் பகுதி வேலிகளையும் சேதப்படுத்தியுள்ளது.

இதேவேளை இச்சம்பவத்தின் போது, இதில் 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான கேசவராசா ததீஸ்கரன் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 6
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி:  தாழமுக்கம் உருவாக வாய்ப்பு 

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...

national hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சாதனை: குறுகிய காலத்தில் நடமாட வைக்கும் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை – தாய்லாந்து நிபுணர்கள் உதவி!

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில், கண்டி...

images 4 7
உலகம்இலங்கை

பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை முந்தைய தரவுகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்...

5dbc2f30 18e7 11ee 8228 794cf17b91f4.jpg
செய்திகள்உலகம்

தமிழகத்தில் அதிர்ச்சி: தாயைத் தாக்கி இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய வழக்கில் 5 பேர் கைது!

இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...