Ranil
அரசியல்இலங்கைசெய்திகள்

‘ரணில் கோ ஹோம்’ கோஷத்தால் எந்த பலனும் இல்லை!

Share

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வக்கட்சி அரசே சிறந்த வழியென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமெனவும் அறைகூவல் விடுத்தார்.

” எனது வீடு எரிக்கப்பட்டுள்ளது. அதனை மீள் நிர்மாணம் செய்யும்வரை ,’ரணில் கோ ஹோம்’ என கோஷம் எழுப்புவதில் பயன் இருக்காது, முடிந்தால் மக்களை திரட்டிவந்து, வீட்டை நிர்மாணித்து தாருங்கள்.” – என ஜனாதிபதி நகைச்சுவை பாணியில் கோரிக்கையொன்றையும் முன்வைத்தார்.

கண்டிக்கு இன்று (30) பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தலதாமாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசியும் பெற்றார்.

அதன்பின்னர் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, இளைஞர்களின் உண்மையான தன்னெழுச்சி போராட்டத்தை, ஒரு சிலர் வன்முறை நோக்கி அழைத்துச்சென்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

” இலங்கை வரலாற்றில் முதன்முதலில் பாசிச தீவிரவாத குழுவொன்றை சந்திக்க நேரிட்டது, வீடுகளை கொளுத்துவதும், புத்தகங்களுக்கு தீ வைப்பதும் ஹிட்லரிடமிருந்து கற்றுக்கொண்டதாகும்.

புலிகள் துப்பாக்கிச்சூடும், குண்டு தாக்குதலும் நடத்தினர். எனினும், முதன்முறையாக பாசிசவாத குழுவை எதிர்கொள்ள நேரிட்டது.” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

” நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நீடித்தால் எம்மால் மீண்டெழ முடியாத நிலை ஏற்படும். எனவே, இந்நிலையிலிருந்து மீள்வதற்கு நிதியை திரட்ட வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும். பிரச்சினைகளை தீர்க்க சர்வக்கட்சி அரசே சிறந்த வழியென.” குறிப்பிட்டு, நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

அதேவேளை, சர்வக்கட்சி அரசு அமைக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை மகாநாயக்க தேரர்களுக்கும் ஜனாதிபதி வழங்கினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...