Sajith Premadasa
இலங்கைசெய்திகள்

நாட்டின் வளங்கள் விற்பனை பாரிய போராட்டத்துக்கு தயார்– எதிர்க்கட்சி அறைகூவல்

Share

கெரவலப்பிட்டிய மின்உற்பத்தி நிலையத்தை அரசு ரகசியமாக அமெரிக்காவுக்கு விற்று வரலாற்றில் மிகப் பெரிய துரோகத்தை நாட்டுக்கு இழைத்துவிட்டது அரசு. நாட்டின் வளங்களை சூறையாடுவதற்கு எதிராக நாம் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பானம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டினுடைய வளங்களை தமது தனிப்பட்ட வளங்கள் எனக் கருதி அவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.

நாட்டின் வளங்களை விற்பனை செய்வது தேசத் துரோகச் செயலாகும். மக்கள் ஆணையை மீறி தனிப்பட்ட கமிஷன் மோசடிகளையும் நிறைவேற்ற நாட்டின் வளங்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இதற்கென நாம் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நாட்டை மீட்பதற்கு விரைவில் பெரும் போராட்டம் ஒன்றை மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...