Sajith Premadasa
இலங்கைசெய்திகள்

நாட்டின் வளங்கள் விற்பனை பாரிய போராட்டத்துக்கு தயார்– எதிர்க்கட்சி அறைகூவல்

Share

கெரவலப்பிட்டிய மின்உற்பத்தி நிலையத்தை அரசு ரகசியமாக அமெரிக்காவுக்கு விற்று வரலாற்றில் மிகப் பெரிய துரோகத்தை நாட்டுக்கு இழைத்துவிட்டது அரசு. நாட்டின் வளங்களை சூறையாடுவதற்கு எதிராக நாம் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பானம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டினுடைய வளங்களை தமது தனிப்பட்ட வளங்கள் எனக் கருதி அவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.

நாட்டின் வளங்களை விற்பனை செய்வது தேசத் துரோகச் செயலாகும். மக்கள் ஆணையை மீறி தனிப்பட்ட கமிஷன் மோசடிகளையும் நிறைவேற்ற நாட்டின் வளங்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இதற்கென நாம் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நாட்டை மீட்பதற்கு விரைவில் பெரும் போராட்டம் ஒன்றை மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...