WhatsApp Image 2022 03 28 at 2.34.19 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

கட்சிகளின் நேர்மையற்ற செயற்பாடே சர்வக்கட்சி தோல்விக்கு காரணம்!

Share

சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பான கலந்துரையாடல்களில் சில கட்சிகள் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் எம்.பி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஒரு கட்சியாக, நாங்கள் ஜனாதிபதியைச் சந்தித்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளோம். இந்தப் பேச்சுகளுக்கு சில கட்சிகள் நிறைவேற்ற முடியாத பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க முயல்கின்றன. வெளிப்படையாக, நேரடியாகச் சொல்லாமல் தவிர்க்கப் பார்க்கிறார்கள். அவர்களில் எவருக்கும் கலந்துரையாடல்களில் இணைந்து கொள்வதில் உண்மையான எண்ணம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஜே.வி.பி மட்டும் சர்வகட்சி அரசாங்கத்தில் சேர விரும்பவில்லையென நேரடியாகக் கூறியுள்ளது. ஆனால் மற்றைய கட்சிகள் தாங்கள் இணைவதற்கு தயாராக இருப்பதாகக் கூறி, பின்னர் பல்வேறு நிபந்தனைகளை முன்வைக்கின்றன. இதுதான் முக்கிய பிரச்சினை என்று நினைக்கிறேன்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...