colombo
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி செயலகம் மீண்டும் முற்றுகை! – கொழும்பில் பதற்றம்

Share

‘நாட்டின் எரிபொருள் வரிசையை முடிவுக்குக் கொண்டு வருவோம்’ எனும் தொனிப்பொருளில் சோசலிச இளைஞர் முன்னணி இன்று முற்பகல் கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் இறுதியில் ஜனாதிபதி செயலகத்தையும் முற்றுகையிட்டுக் கோஷம் எழுப்பினர்.

நாட்டின் எரிபொருள் வரிசையை முடிவுக்குக் கொண்டு வருவோம், இந்தியாவுக்கு வழங்கப்பட்ட எண்ணெய்க் குதங்கள் மற்றும் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்ட யுகதனவி ஆகியவற்றை மீளப் பெறுவோம் உள்ளிட்ட கோரிக்கைககளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கொழும்பின் பல பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

இதற்கமைய தொழிநுட்பக் கல்லூரி சந்தி, மருதானை முதல் கோட்டை வரையிலான வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.

அத்துடன், தொழிநுட்பக் கல்லூரி சந்தி முதல் காலிமுகத்திடல் வரை நடைபவனியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்துக்குள் உள்நுழைய முற்பட்ட நிலையில் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...